அறத்துப்பால் (Aram)Chapter 34: நிலையாமை

    திருக்குறள் 335

    Thirukkural Verse 335 — Instability

    Thiruvalluvar

    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்


    English Meaning

    Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

    சாலமன் பாப்பையா

    நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

    கலைஞர்

    வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்