அறத்துப்பால் (Aram)Chapter 4: அரண் வலியுறுத்தல்

    திருக்குறள் 34

    Thirukkural Verse 34 — அரண் வலியுறுத்தல்

    Thiruvalluvar

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற.


    English Meaning

    Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

    சாலமன் பாப்பையா

    மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

    கலைஞர்

    மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை