அறத்துப்பால் (Aram)Chapter 4: அரண் வலியுறுத்தல்

    திருக்குறள் 36

    Thirukkural Verse 36 — அரண் வலியுறுத்தல்

    Thiruvalluvar

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.


    English Meaning

    Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

    சாலமன் பாப்பையா

    முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

    கலைஞர்

    பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்