அறத்துப்பால் (Aram)Chapter 37: அவா அறுத்தல்
திருக்குறள் 361
Thirukkural Verse 361 — அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.
English Meaning
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
சாலமன் பாப்பையா
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
கலைஞர்
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்