அறத்துப்பால் (Aram)Chapter 38: ஊழ்
திருக்குறள் 378
Thirukkural Verse 378 — Fate
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.
English Meaning
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them sufer the hindrances to which they are liable, and they pass away.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
சாலமன் பாப்பையா
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
கலைஞர்
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்