அறத்துப்பால் (Aram)Chapter 38: ஊழ்

    திருக்குறள் 380

    Thirukkural Verse 380 — Fate

    Thiruvalluvar

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.


    English Meaning

    What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

    சாலமன் பாப்பையா

    விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

    கலைஞர்

    இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?