பொருட்பால் (Porul)Chapter 39: இறைமாட்சி

    திருக்குறள் 384

    Thirukkural Verse 384 — The Greatness of a King

    Thiruvalluvar

    அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.


    English Meaning

    He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

    சாலமன் பாப்பையா

    தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

    கலைஞர்

    அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்