பொருட்பால் (Porul)Chapter 39: இறைமாட்சி

    திருக்குறள் 386

    Thirukkural Verse 386 — The Greatness of a King

    Thiruvalluvar

    காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்


    English Meaning

    The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

    சாலமன் பாப்பையா

    நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)

    கலைஞர்

    காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்