பொருட்பால் (Porul)Chapter 41: கல்லாமை

    திருக்குறள் 401

    Thirukkural Verse 401 — Ignorance

    Thiruvalluvar

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.


    English Meaning

    To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

    சாலமன் பாப்பையா

    அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

    கலைஞர்

    நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்