பொருட்பால் (Porul)Chapter 41: கல்லாமை

    திருக்குறள் 408

    Thirukkural Verse 408 — Ignorance

    Thiruvalluvar

    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட் ட திரு.


    English Meaning

    Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

    சாலமன் பாப்பையா

    படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

    கலைஞர்

    முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்