பொருட்பால் (Porul)Chapter 42: கேள்வி
திருக்குறள் 418
Thirukkural Verse 418 — Hearing
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.
English Meaning
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
சாலமன் பாப்பையா
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
கலைஞர்
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்