பொருட்பால் (Porul)Chapter 42: கேள்வி

    திருக்குறள் 420

    Thirukkural Verse 420 — Hearing

    Thiruvalluvar

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?


    English Meaning

    What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

    சாலமன் பாப்பையா

    செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

    கலைஞர்

    செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்