பொருட்பால் (Porul)Chapter 43: அறிவுடைமை

    திருக்குறள் 422

    Thirukkural Verse 422 — Possession of Wisdom

    Thiruvalluvar

    சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு.


    English Meaning

    Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

    சாலமன் பாப்பையா

    மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.

    கலைஞர்

    மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்