பொருட்பால் (Porul)Chapter 44: குற்றங்கடிதல்

    திருக்குறள் 434

    Thirukkural Verse 434 — Guarding Against Faults

    Thiruvalluvar

    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை.


    English Meaning

    Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

    கலைஞர்

    குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்