பொருட்பால் (Porul)Chapter 44: குற்றங்கடிதல்

    திருக்குறள் 439

    Thirukkural Verse 439 — Guarding Against Faults

    Thiruvalluvar

    வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.


    English Meaning

    Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

    Share this result

    Generate a beautiful card to share on WhatsApp or social media. Your link gives friends a 14-day Full Pro trial.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

    சாலமன் பாப்பையா

    எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

    கலைஞர்

    எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது