பொருட்பால் (Porul)Chapter 46: சிற்றினம் சேராமை
திருக்குறள் 456
Thirukkural Verse 456 — Avoiding Mean Associations
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.
English Meaning
To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
சாலமன் பாப்பையா
மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
கலைஞர்
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்