பொருட்பால் (Porul)Chapter 46: சிற்றினம் சேராமை

    திருக்குறள் 456

    Thirukkural Verse 456 — Avoiding Mean Associations

    Thiruvalluvar

    மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.


    English Meaning

    To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

    சாலமன் பாப்பையா

    மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

    கலைஞர்

    மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்