பொருட்பால் (Porul)Chapter 46: சிற்றினம் சேராமை

    திருக்குறள் 458

    Thirukkural Verse 458 — Avoiding Mean Associations

    Thiruvalluvar

    மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.


    English Meaning

    Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

    சாலமன் பாப்பையா

    மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

    கலைஞர்

    மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்