அறத்துப்பால் (Aram)Chapter 5: இல்வாழ்க்கை

    திருக்குறள் 47

    Thirukkural Verse 47 — Domestic Life

    Thiruvalluvar

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.


    English Meaning

    Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

    சாலமன் பாப்பையா

    கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

    கலைஞர்

    நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்