பொருட்பால் (Porul)Chapter 48: வலியறிதல்

    திருக்குறள் 477

    Thirukkural Verse 477 — Knowing One's Strength

    Thiruvalluvar

    ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி.


    English Meaning

    Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

    சாலமன் பாப்பையா

    எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

    கலைஞர்

    வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்