பொருட்பால் (Porul)Chapter 50: இடன் அறிதல்

    திருக்குறள் 496

    Thirukkural Verse 496 — இடன் அறிதல்

    Thiruvalluvar

    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து.


    English Meaning

    Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

    சாலமன் பாப்பையா

    வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

    கலைஞர்

    ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது' `கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்