அறத்துப்பால் (Aram)Chapter 1: கடவுள் வாழ்த்து

    திருக்குறள் 5

    Thirukkural Verse 5 — The Praise of God

    Thiruvalluvar

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


    English Meaning

    The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

    சாலமன் பாப்பையா

    கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

    கலைஞர்

    இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்