அறத்துப்பால் (Aram)Chapter 5: இல்வாழ்க்கை

    திருக்குறள் 50

    Thirukkural Verse 50 — Domestic Life

    Thiruvalluvar

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்.


    English Meaning

    He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

    சாலமன் பாப்பையா

    மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

    கலைஞர்

    தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்