பொருட்பால் (Porul)Chapter 52: தெரிந்து வினையாடல்

    திருக்குறள் 512

    Thirukkural Verse 512 — Testing and Employing

    Thiruvalluvar

    வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.


    English Meaning

    Let him do (the king’s) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

    கலைஞர்

    வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்