பொருட்பால் (Porul)Chapter 52: தெரிந்து வினையாடல்
திருக்குறள் 518
Thirukkural Verse 518 — Testing and Employing
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.
English Meaning
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.
கலைஞர்
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்