பொருட்பால் (Porul)Chapter 54: பொச்சாவாமை
திருக்குறள் 537
Thirukkural Verse 537 — Not Forgetting
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
English Meaning
There is nothing too dificult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
சாலமன் பாப்பையா
மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
கலைஞர்
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை