பொருட்பால் (Porul)Chapter 57: வெருவந்த செய்யாமை

    திருக்குறள் 564

    Thirukkural Verse 564 — Not Being Cruel

    Thiruvalluvar

    இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும்.


    English Meaning

    The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

    சாலமன் பாப்பையா

    நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

    கலைஞர்

    கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்