பொருட்பால் (Porul)Chapter 58: கண்ணோட்டம்

    திருக்குறள் 575

    Thirukkural Verse 575 — Benevolence

    Thiruvalluvar

    கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்


    English Meaning

    Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

    சாலமன் பாப்பையா

    ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

    கலைஞர்

    கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்