பொருட்பால் (Porul)Chapter 59: ஒற்றாடல்

    திருக்குறள் 581

    Thirukkural Verse 581 — Espionage

    Thiruvalluvar

    ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.


    English Meaning

    Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

    சாலமன் பாப்பையா

    ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

    கலைஞர்

    நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்