பொருட்பால் (Porul)Chapter 61: மடி இன்மை
திருக்குறள் 601
Thirukkural Verse 601 — மடி இன்மை
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.
English Meaning
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
சாலமன் பாப்பையா
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.
கலைஞர்
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்