பொருட்பால் (Porul)Chapter 62: ஆள்வினை உடைமை

    திருக்குறள் 612

    Thirukkural Verse 612 — ஆள்வினை உடைமை

    Thiruvalluvar

    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.


    English Meaning

    Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

    கலைஞர்

    எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்