பொருட்பால் (Porul)Chapter 62: ஆள்வினை உடைமை
திருக்குறள் 620
Thirukkural Verse 620 — ஆள்வினை உடைமை
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.
English Meaning
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.
சாலமன் பாப்பையா
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
கலைஞர்
``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்