பொருட்பால் (Porul)Chapter 65: சொல்வன்மை

    திருக்குறள் 648

    Thirukkural Verse 648 — Power of Speech

    Thiruvalluvar

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.


    English Meaning

    If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

    சாலமன் பாப்பையா

    சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

    கலைஞர்

    வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்