பொருட்பால் (Porul)Chapter 65: சொல்வன்மை

    திருக்குறள் 650

    Thirukkural Verse 650 — Power of Speech

    Thiruvalluvar

    இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.


    English Meaning

    Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

    சாலமன் பாப்பையா

    தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

    கலைஞர்

    கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்