பொருட்பால் (Porul)Chapter 67: வினைத்திட்பம்
திருக்குறள் 668
Thirukkural Verse 668 — Firmness in Action
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.
English Meaning
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.
கலைஞர்
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்