அறத்துப்பால் (Aram)Chapter 7: மக்கட்பேறு

    திருக்குறள் 68

    Thirukkural Verse 68 — The Wealth of Children

    Thiruvalluvar

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


    English Meaning

    That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

    சாலமன் பாப்பையா

    தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

    கலைஞர்

    பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்