பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 701

    Thirukkural Verse 701 — Reading Thoughts

    Thiruvalluvar

    கூறாமை நோக்க஧க் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி.


    English Meaning

    The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

    சாலமன் பாப்பையா

    ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.

    கலைஞர்

    ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்