பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 710

    Thirukkural Verse 710 — Reading Thoughts

    Thiruvalluvar

    நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற.


    English Meaning

    The measuring-rod of those (ministers) who say “we are acute” will on inquiry be found to be their (own) eyes and nothing else.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

    சாலமன் பாப்பையா

    நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.

    கலைஞர்

    நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை