பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 718

    Thirukkural Verse 718 — அவை அறிதல்

    Thiruvalluvar

    உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று.


    English Meaning

    Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

    சாலமன் பாப்பையா

    பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

    கலைஞர்

    உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்