பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 734
Thirukkural Verse 734 — The Country
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.
English Meaning
A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
சாலமன் பாப்பையா
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
கலைஞர்
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்