பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 736

    Thirukkural Verse 736 — The Country

    Thiruvalluvar

    கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை.


    English Meaning

    The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), sufers no diminution in its fruitfulness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

    சாலமன் பாப்பையா

    பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

    கலைஞர்

    எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்