பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 739

    Thirukkural Verse 739 — The Country

    Thiruvalluvar

    நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.


    English Meaning

    The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

    சாலமன் பாப்பையா

    தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

    கலைஞர்

    இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்