பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 747

    Thirukkural Verse 747 — The Fort

    Thiruvalluvar

    முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்.


    English Meaning

    A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

    சாலமன் பாப்பையா

    முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

    கலைஞர்

    முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்