பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 767

    Thirukkural Verse 767 — Excellence of the Army

    Thiruvalluvar

    தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து.


    English Meaning

    That is an army which knowing the art of warding of an impending struggle, can bear against the dust-van (of a hostile force).

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

    சாலமன் பாப்பையா

    தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.

    கலைஞர்

    களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்