பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 772
Thirukkural Verse 772 — படைச் செருக்கு
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
English Meaning
It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
சாலமன் பாப்பையா
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.
கலைஞர்
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது