பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 799

    Thirukkural Verse 799 — Testing Friendship

    Thiruvalluvar

    கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்.


    English Meaning

    The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one’s mind at the time of death.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

    சாலமன் பாப்பையா

    கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.

    கலைஞர்

    ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்