பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 804

    Thirukkural Verse 804 — Old Friendship

    Thiruvalluvar

    விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்.


    English Meaning

    If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

    சாலமன் பாப்பையா

    தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

    கலைஞர்

    பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்