பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 825

    Thirukkural Verse 825 — Unreal Friendship

    Thiruvalluvar

    மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.


    English Meaning

    In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.

    சாலமன் பாப்பையா

    மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.

    கலைஞர்

    மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது