பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 831
Thirukkural Verse 831 — Folly
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
English Meaning
Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.
சாலமன் பாப்பையா
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.
கலைஞர்
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்