பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்
திருக்குறள் 835
Thirukkural Verse 835 — Folly
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.
English Meaning
A fool can procure in a single birth a hell into which he may enter and sufer through all the seven births.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
சாலமன் பாப்பையா
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.
கலைஞர்
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்