பொருட்பால் (Porul)Chapter 71: குறிப்பறிதல்

    திருக்குறள் 844

    Thirukkural Verse 844 — Petty Mindedness

    Thiruvalluvar

    வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.


    English Meaning

    What is called want of wisdom is the vanity which says, “We are wise”.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

    சாலமன் பாப்பையா

    அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

    கலைஞர்

    ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்